காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்துவதாகக் கூறி சக்தி சேனா மற்றும் பாரத் சேனா அமைப்பினர் கோவையில் இன்று காதல தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்துவதாகக் கூறி சக்தி சேனா மற்றும் பாரத் சேனா அமைப்பினர் கோவையில் இன்று காதல தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கோவையில் பூங்கொத்துக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் விற்பனை தர்போதுமுதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், காதலர் தினம் என்ற பெயரில் பூங்கா, திரையரங்குகள், கோவில் மற்றும் கடற்கரை பகுதிகளில் காதலர்கள் ஆபாசமாக நடப்பதாகவும், கலாச்சார சீர்கேட்டினை ஏற்படுத்து வருவதாகவும் கூறி இன்று காலை கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு சக்தி சேனா மற்றும் பாரத் சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காதலர்தின கொண்டாட்ங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், காதலர்தின வாழ்த்து அட்டைகளை கிழித்தும் அவர்கள் காதலர் தினத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கோவையில் பூங்கொத்துக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் விற்பனை தர்போதுமுதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், காதலர் தினம் என்ற பெயரில் பூங்கா, திரையரங்குகள், கோவில் மற்றும் கடற்கரை பகுதிகளில் காதலர்கள் ஆபாசமாக நடப்பதாகவும், கலாச்சார சீர்கேட்டினை ஏற்படுத்து வருவதாகவும் கூறி இன்று காலை கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு சக்தி சேனா மற்றும் பாரத் சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காதலர்தின கொண்டாட்ங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், காதலர்தின வாழ்த்து அட்டைகளை கிழித்தும் அவர்கள் காதலர் தினத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.