முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு துடிப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு துடிப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்தலாக் கூறி முஸ்லீம் பெண்களுக்கு விவகாரத்து வழங்கும் நடைபெற ஏற்கக்கூடியது அல்ல என்று கூறி அதனை அகற்றும் வகையில் மத்திய அரசு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு முஸ்லீம் அமைப்பில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு துடித்து வருவதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த மகளிர் அமைப்பு நேற்று திருப்பூர் சி.டி.சி. டிப்போ அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாத்திமா முஸ்தபா, துணை செயலாளர் ஆஷா அன்வர், உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
