திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.
நேற்று தொடங்கிய இந்த போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்தும் வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வயது மற்றும் எடை ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. கத்தா மற்றும் குமிட்டே பிரிவில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை வென்ற வீரர்களுக்குச் சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
மாணவர்களிடையே தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஆக்ரோசமாக மோதிக்கொண்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

நேற்று தொடங்கிய இந்த போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்தும் வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வயது மற்றும் எடை ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. கத்தா மற்றும் குமிட்டே பிரிவில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை வென்ற வீரர்களுக்குச் சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
மாணவர்களிடையே தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஆக்ரோசமாக மோதிக்கொண்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
