வெள்ளகோவில் பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் உயிரிழந்தன.
திருப்பூர்: வெள்ளகோவில் பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் உயிரிழந்தன.
வெள்ளகோவில் அருகேயுள்ள வேப்பம்பாளையம் பகுதியில் ஜெகதீசன் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இன்று காலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது அவரது கோழி பண்ணை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
இதனையடுத்து ஜெகதீசன் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பண்ணையிலிருந்த அனைத்து பிராய்லர் கோழிகளும் தீயில் கருகி உயிரிழந்தன. இறந்த கோழிகளின் மதிப்பு பல லட்ச ரூபாயாகும்.

அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த இன்னொரு கோழி பண்ணை தப்பியது. இதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மின்சார கசிவின் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் அருகேயுள்ள வேப்பம்பாளையம் பகுதியில் ஜெகதீசன் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இன்று காலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது அவரது கோழி பண்ணை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
இதனையடுத்து ஜெகதீசன் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பண்ணையிலிருந்த அனைத்து பிராய்லர் கோழிகளும் தீயில் கருகி உயிரிழந்தன. இறந்த கோழிகளின் மதிப்பு பல லட்ச ரூபாயாகும்.

அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த இன்னொரு கோழி பண்ணை தப்பியது. இதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மின்சார கசிவின் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.