அரசியலில் இருந்தாலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்வேன் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை: அரசியலில் இருந்தாலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்வேன் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்ற கம்பன் விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசியலில் இருந்தாலும் தொடந்து இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறேன். அதற்காக என்னை தயார்படுத்திக் கொள்ள நிறைய படித்து வருகிறேன். மாதம் தோறும் ஒரு இலக்கியக் கூட்டத்திலாவது கலந்து கொள்கிறேன்.
அவ்வாறு இலக்கியக் கூட்டங்களுக்கு செல்லும் போது அரசியல் பேசுவதில்லை" என்றார்.
ஹார்வேர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க அரசியல் கட்சி நிதி வழங்க வேண்டும் என்று கூறப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்க வைகோ மறுத்துவிட்டார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்ற கம்பன் விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசியலில் இருந்தாலும் தொடந்து இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறேன். அதற்காக என்னை தயார்படுத்திக் கொள்ள நிறைய படித்து வருகிறேன். மாதம் தோறும் ஒரு இலக்கியக் கூட்டத்திலாவது கலந்து கொள்கிறேன்.
அவ்வாறு இலக்கியக் கூட்டங்களுக்கு செல்லும் போது அரசியல் பேசுவதில்லை" என்றார்.
ஹார்வேர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க அரசியல் கட்சி நிதி வழங்க வேண்டும் என்று கூறப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்க வைகோ மறுத்துவிட்டார்.