கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடக்கும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018” நிகழ்ச்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடக்கும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018” நிகழ்ச்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி அருகே சமத்துாரில் 'வாணவராயர் பவுண்டேஷன்' சார்பில் கொங்கு நாட்டு கால்நடைத் திருவிழா மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கொங்கு கலாச்சாரம் மற்றும் கால்நடைகளை போற்றும் வகையிலான இந்த விழா, நான்காவது ஆண்டாக சமத்துார், பெத்தநாயக்கனுார் சாலையில் உள்ள சக்தி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் நேற்று தொடங்கியது. 11-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவானது, கோமாதா பூஜையுடன் தொடங்கியது. இன்று கால்நடைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், வெற்றி பெற்ற கால்நடைகளுக்கான விருது நாளை வழங்கப்படும். மேலும், வேளாண்மை மற்றும் பால் பண்ணைக்கான உபகரணங்களின் கண்காட்சியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
3 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், குறைந்தபட்சம் ஒருலட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொள்ளாச்சி அருகே சமத்துாரில் 'வாணவராயர் பவுண்டேஷன்' சார்பில் கொங்கு நாட்டு கால்நடைத் திருவிழா மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கொங்கு கலாச்சாரம் மற்றும் கால்நடைகளை போற்றும் வகையிலான இந்த விழா, நான்காவது ஆண்டாக சமத்துார், பெத்தநாயக்கனுார் சாலையில் உள்ள சக்தி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் நேற்று தொடங்கியது. 11-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவானது, கோமாதா பூஜையுடன் தொடங்கியது. இன்று கால்நடைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், வெற்றி பெற்ற கால்நடைகளுக்கான விருது நாளை வழங்கப்படும். மேலும், வேளாண்மை மற்றும் பால் பண்ணைக்கான உபகரணங்களின் கண்காட்சியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
3 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், குறைந்தபட்சம் ஒருலட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.