பசுந்தேயிலைக்கு உரிய விலை கோரும் நீலகிரி மாவட்ட விவசாயிகள்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இம்மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பச்சைக் கம்பளம் போற்றியது போல் தேயிலை தோட்டங்கள் அனைவரின் கண்களுக்கும் விருந்தளித்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது.

நீலகிரி : மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இம்மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பச்சைக் கம்பளம் போற்றியது போல் தேயிலை தோட்டங்கள் அனைவரின் கண்களுக்கும் விருந்தளித்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது.



இந்த தேயிலை விவசாயத்தில் சுமார் 65 ஆயிரம் சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் பசுந்தேயிலையை உற்பத்தி செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு காரணங்களால் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பல விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களை விற்று விட்டு தங்களின் வாழ்வாதாரத்திற்காகச் சமவெளி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து வரும் அவலம் நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.

பசுந்தேயிலை 

நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து கொண்டு தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த தொழிற்சாலைக்கு விநியோகித்து வருகின்றனர். பசுந்தேயிலைக்கு கடந்த பல ஆண்டுகளாக போதிய விலை இல்லாத போதும் மாற்று தொழில் ஏதும் இங்கு இல்லாததால், கிடைக்கும் விலையைப் பெற்று தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு விலை நிர்ணைய குழுவை அமைத்து மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் குன்னூர் இங்கோ சர்வ் நிர்வாகத்தால் அறிவித்து வருகிறது. விலை நிர்ணையம் செய்த உடனே உறுப்பினர்களுக்கு அந்தந்த தொழிற்சாலை நிறுவனங்கள் மூலம் குறுஞ்செய்திகள் மூலம் விலை குறித்த பட்டியலை அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆனால் தேயிலை வாரியம் மூலம் கிலோவுக்கு ரூ. 11.50 என நிர்ணையம் செய்தாலும் விவசாயிகளுக்கு 2 முதல் 4 ரூபாய் வரை குறைத்தே தொழிற்சாலை நிர்வாகம் அளித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சுமார் ரூ.20 கோடி வரை விவசாயிகளுக்கு அரசு கூட்டுறவு தொழிற்சாலைகள் நிலுவை வைத்துள்ளதாக விவசாயிகள் முக்கிய குற்றச்சாட்டாக முன் வைக்கின்றனர்.

மேலும் தற்போது வழங்கப்படும் விலை போதுமானதாக இல்லாததால் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் கூட வழங்க முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், தேயிலை வாரியமும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், நீலகிரி தேயிலை தூளை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேயிலை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...