உழவர் தினவிழா 2018 மற்றும் புதிய பயிர் இரகங்கள் வெளியீட்டு விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உழவர் தின விழா மற்றும் புதிய பயிர் ரகங்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உழவர் தின விழா மற்றும் புதிய பயிர் ரகங்கள் வெளியீட்டு விழா இன்று  நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவில், விவசாயம் சார்ந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய கருவிகளையும், புதிய பயிர் ரகங்களையும் அமைச்சர்கள் அறிமுகப்படுத்தி வெளியிட்டனர். மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. வேளாண் செம்மல் விருது, புதிய கண்டுபிடிப்பாளர் விருது, சிறந்த பெண் விவசாயிகளுக்கான விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது.



உழவர் தின விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், சிறந்த பல்கலைக்கழகமாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. மேலும், காங்கேயத்திலிருந்து கேரளாவிற்கு வரும் தேங்காய் எண்ணெய்கள் தரமற்று இருப்பதாகக் கேரளா அமைச்சர் சைலஜா கூறி இருப்பது தவறான தகவல். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் எண்ணெய், காய்கறிகள் என அனைத்தும் தரமானவை. மேலும், கோவை மாநகராட்சியில் கான்ட்ரெக்ட் எடுத்து செய்யும் வேலைகளில் பல கோடி முறைகேடு என்ற குற்றச்சாட்டிலும், எந்தவித உண்மையும் இல்லை. இவ்வாறு கூறினார்.  எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...