கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உழவர் தின விழா மற்றும் புதிய பயிர் ரகங்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உழவர் தின விழா மற்றும் புதிய பயிர் ரகங்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவில், விவசாயம் சார்ந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய கருவிகளையும், புதிய பயிர் ரகங்களையும் அமைச்சர்கள் அறிமுகப்படுத்தி வெளியிட்டனர். மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. வேளாண் செம்மல் விருது, புதிய கண்டுபிடிப்பாளர் விருது, சிறந்த பெண் விவசாயிகளுக்கான விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது.

உழவர் தின விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், சிறந்த பல்கலைக்கழகமாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. மேலும், காங்கேயத்திலிருந்து கேரளாவிற்கு வரும் தேங்காய் எண்ணெய்கள் தரமற்று இருப்பதாகக் கேரளா அமைச்சர் சைலஜா கூறி இருப்பது தவறான தகவல். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் எண்ணெய், காய்கறிகள் என அனைத்தும் தரமானவை. மேலும், கோவை மாநகராட்சியில் கான்ட்ரெக்ட் எடுத்து செய்யும் வேலைகளில் பல கோடி முறைகேடு என்ற குற்றச்சாட்டிலும், எந்தவித உண்மையும் இல்லை. இவ்வாறு கூறினார். எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவில், விவசாயம் சார்ந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய கருவிகளையும், புதிய பயிர் ரகங்களையும் அமைச்சர்கள் அறிமுகப்படுத்தி வெளியிட்டனர். மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. வேளாண் செம்மல் விருது, புதிய கண்டுபிடிப்பாளர் விருது, சிறந்த பெண் விவசாயிகளுக்கான விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது.

உழவர் தின விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், சிறந்த பல்கலைக்கழகமாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. மேலும், காங்கேயத்திலிருந்து கேரளாவிற்கு வரும் தேங்காய் எண்ணெய்கள் தரமற்று இருப்பதாகக் கேரளா அமைச்சர் சைலஜா கூறி இருப்பது தவறான தகவல். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் எண்ணெய், காய்கறிகள் என அனைத்தும் தரமானவை. மேலும், கோவை மாநகராட்சியில் கான்ட்ரெக்ட் எடுத்து செய்யும் வேலைகளில் பல கோடி முறைகேடு என்ற குற்றச்சாட்டிலும், எந்தவித உண்மையும் இல்லை. இவ்வாறு கூறினார். எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
