பழனியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட முத்துகுமாரின் தந்தை தற்போது உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து உள்ளனர்.
பழனியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட முத்துகுமாரின் தந்தை தற்போது உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து உள்ளனர்.
பழனியில் கடந்த 2014ஆம் ஆண்டு முத்துகுமார் என்பவர் வேறுபிரிவினரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இதனால், அவரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கொடைக்கானலில் பணியில் இருந்த முத்துகுமாரின் தந்தை பரமசிவம் நினைவு இழந்து கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். பரமசிவத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனிடையே, முத்துக்குமார் ஆணவ கொலை வழக்கை எவிடென்ஸ் அமைப்பின் கதிர் நடத்தி வருகிறார். தற்போது, பரமசிவத்தின் மர்ம மரணத்தின் பின்னணி கண்டறியப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்து உள்ளார். பிண கூராய்வினை வீடியோ எடுக்க வேண்டும், இரண்டு மருத்துவர்கள் அதில் ஈடுபட வேண்டும், மருத்துவ பரிசோதனை அறிக்கை உடனடியாக வெளியிடப் படவேண்டும், குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து உள்ளனர்.
பழனியில் கடந்த 2014ஆம் ஆண்டு முத்துகுமார் என்பவர் வேறுபிரிவினரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இதனால், அவரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கொடைக்கானலில் பணியில் இருந்த முத்துகுமாரின் தந்தை பரமசிவம் நினைவு இழந்து கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். பரமசிவத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனிடையே, முத்துக்குமார் ஆணவ கொலை வழக்கை எவிடென்ஸ் அமைப்பின் கதிர் நடத்தி வருகிறார். தற்போது, பரமசிவத்தின் மர்ம மரணத்தின் பின்னணி கண்டறியப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்து உள்ளார். பிண கூராய்வினை வீடியோ எடுக்க வேண்டும், இரண்டு மருத்துவர்கள் அதில் ஈடுபட வேண்டும், மருத்துவ பரிசோதனை அறிக்கை உடனடியாக வெளியிடப் படவேண்டும், குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து உள்ளனர்.