ஐ லீக் கால்பந்து போட்டி : வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்

கோவையில் நடைபெற்று வரும் ஐ லீக் கால்பந்து போடியில் நடுவர்களின் சில தவறான முடிவுகளால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை கால்பந்து கழக பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: கோவையில் நடைபெற்று வரும் ஐ லீக் கால்பந்து போடியில் நடுவர்களின் சில தவறான முடிவுகளால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை கால்பந்து கழக பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தியாவின் தலைசிறந்த 10 கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஹீரோ ஐ லீக் கால்பந்தாட்ட போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை வ.ஊ.சி. மைதானத்தில் சென்னை கால்பந்து அணிக்கு எதிராக ஷிலாங் கால்பந்து அணி மோதுகிறது.



இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஷிலாங் அணி பயிற்சியாளர் பாபி நாங்பெட் பேசுகையில், "நாளை நடைபெறும் போட்டிக்கு எங்கள் அணி வீரர்கள் மனதளவில் தயாராகவிட்டனர். கோவையில் முதன் முறையாக நாங்கள் விளையாடுகிறோம். கடந்த முறை சென்னை அணிக்கு எதிரான போட்டி சமனில் முடிந்தது. மேலும், எந்த ஒரு அணிக்கும் வெளி மைதானங்களில் விளையாடும் போது சவாலாகத் தான் இருக்கும். ரசிகர்கள் எப்போதும் தங்கள் சொந்த அணி விளையாடும் போது அந்த அணிக்கு ஆதரவளிக்கும் போது வீரர்கள் உற்சாகத்துடனும் வெற்றி முனைப்புடன் விளையாடுவார்கள். எங்கள் அணி ஹீரோ ஐ லீக் போட்டிகளில் வெற்றி தோல்வி என மாறி மாறி புள்ளிகள் அடிப்படையில் பின் தங்கிவிட்டது. இனி வரும் போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் முன்னேற முயற்சிப்போம்" என்றார்.

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தராஜன் பேசுகையில், "அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால் வெற்றி பெற முடியாமல் திணறி வருகின்றனர். சொந்த மைதானத்தில் ஒரு வெற்றி கூட பெறாதது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நடுவர்களின் சில தவறான முடிவுகளால் எங்கள் அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாளைய போட்டியில் ஷிலாங்க எதிரான போட்டியில் சென்னை அணிக்கு வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது. காலநிலை எங்களுக்குச் சாதகமானதாக உள்ளது.

மேலும் காயம் காரணமாக நாளைய போட்டியில் அணியின் கோல்கீப்பர் யூரோஸிற்க்கு பதிலாக கபீர் விளையாடுவார். அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கொரிய வீரர் கிம் மற்றும் செர்பிய வீர்ர் அலெக்ஸ் சிறப்பாக விளையாடுகின்றனர். வீரர்கள் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு நாளைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வரும் போட்டிகளில் வெற்றி இலகுவாக அமைய வாய்ப்புள்ளது" என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...