தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே தெரிவித்துள்ளார்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 10 மாடி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவை இன்று திறந்து வைத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், ''ஏழைகளுக்குக் குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிப்பதன் மூலம் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பெயர் துறவி ராமகிருஷ்ணாவை நினைவுக்குக் கொண்டு வருகிறது. மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் மக்களின் மருத்துவத்திற்காக ரூ. 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களின் நலனில் அதிகம் கவனம் செலுத்துகிறது. இதற்காக நாடு முழுவதும் 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 24 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. 2018-2019ஆம் ஆண்டில் ஏழைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஏழைகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் வேகமாகப் பரவி வந்த டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியுள்ளேன்.” இவ்வாறு கூறினார்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 10 மாடி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவை இன்று திறந்து வைத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், ''ஏழைகளுக்குக் குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிப்பதன் மூலம் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பெயர் துறவி ராமகிருஷ்ணாவை நினைவுக்குக் கொண்டு வருகிறது. மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் மக்களின் மருத்துவத்திற்காக ரூ. 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களின் நலனில் அதிகம் கவனம் செலுத்துகிறது. இதற்காக நாடு முழுவதும் 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 24 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. 2018-2019ஆம் ஆண்டில் ஏழைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஏழைகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் வேகமாகப் பரவி வந்த டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியுள்ளேன்.” இவ்வாறு கூறினார்.