தீபா வீட்டிற்கு வந்த டுபாக்கூர் வருமான வரித்துறை அதிகாரி தப்பியோட்டம்

ஜெ.தீபா வீட்டிற்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.தீபா வீட்டிற்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த அவர் எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார். தனது பேரவையில் பதவி கொடுப்பதாக கூறி பலரிடம் பலகோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக தீபா மற்றும் அவரது டிரைவர் ராஜா மீது போலீஸில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இன்று காலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள தீபா வீட்டிற்குத் தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ்குமார் என்று கூறிக்கொண்டு ஒரு நபர் வந்தார். அவர் கையில் வாரண்டு மற்றும் ஐடி ஆகியவை வைத்திருந்ததாகத் தெரிகிறது. 

அவர் மீது தீபா வீட்டில் இருந்தவர்களுக்குச் சந்தேகம் ஏற்படவே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், வருமான வரித்துறை என்று கூறி வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து தப்பியோடினார். 

காவல் துறை அதிகாரிகள் அவரை துரத்திச் சென்றனர். ஆனால், அதற்குள் அருகில் இருந்த வணிக வளாக கட்டிடத்திற்குள் புகுந்த அந்த நபர் மாயமானார். தற்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...