கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் விநியோகம் அபிவிருத்தி பணிகள் மற்றும் பில்லூர் 3 திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை : கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் விநியோகம் அபிவிருத்தி பணிகள் மற்றும் பில்லூர் 3 திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் அண்மையில் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து, புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 189.57 மதிப்பில் குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில், குடிநீர் விநியோகம் அபிவிருத்தி பணிகள் மற்றும் பில்லூர் 3 திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியிளர் மதியழகன், தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதிசேவை நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சொக்கலிங்கம், நிர்வாகப் பொறியாளர்கள் ரங்கராஜன், சம்பத்குமார், மாநகராட்சி பொறியாளர்கள் நடராஜன், உதவி நிர்வாகப் பொறியாளர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் அண்மையில் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து, புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 189.57 மதிப்பில் குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில், குடிநீர் விநியோகம் அபிவிருத்தி பணிகள் மற்றும் பில்லூர் 3 திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியிளர் மதியழகன், தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதிசேவை நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சொக்கலிங்கம், நிர்வாகப் பொறியாளர்கள் ரங்கராஜன், சம்பத்குமார், மாநகராட்சி பொறியாளர்கள் நடராஜன், உதவி நிர்வாகப் பொறியாளர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.