திருப்பூர் அருகே வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவனைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவனைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கலூரை அடுத்த தொட்டம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் விஜயன். கூலி தொழிலாளியான இவருக்கு தர்ணீஸ் என்கிற மகனும், மகளும் உள்ளனர். மேலும், தர்ணீஸ் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவரும் நிலையில், இன்று பள்ளிக்கு செல்லாமல் மதியம் சுமார் 1 மணி அளவில் அருகில் உள்ள பி.ஏ.பி வாய்க்காலில் தனது தாத்தா முருகனுடன் குளிக்க சென்றதாகத் தெரிகிறது. இதனைக் கரை ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென தவறி வாய்க்கால் தண்ணீரில் விழுந்துள்ளான்.
இதனைக் கண்ட அவனது தாத்தா முருகன் அதிர்ச்சி அடைந்து தர்ணீஸை காப்பாற்ற முயன்ற போது, நீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டான். பின்னர், இது குறித்து உறவினர்களுக்கும் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் போலீஸார் பொதுமக்கள் துணையோடு தர்ணீஸின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 கிலோமீட்டர் அளவிற்குத் தேடியும் கிடைக்காததால் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கலூரை அடுத்த தொட்டம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் விஜயன். கூலி தொழிலாளியான இவருக்கு தர்ணீஸ் என்கிற மகனும், மகளும் உள்ளனர். மேலும், தர்ணீஸ் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவரும் நிலையில், இன்று பள்ளிக்கு செல்லாமல் மதியம் சுமார் 1 மணி அளவில் அருகில் உள்ள பி.ஏ.பி வாய்க்காலில் தனது தாத்தா முருகனுடன் குளிக்க சென்றதாகத் தெரிகிறது. இதனைக் கரை ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென தவறி வாய்க்கால் தண்ணீரில் விழுந்துள்ளான்.
இதனைக் கண்ட அவனது தாத்தா முருகன் அதிர்ச்சி அடைந்து தர்ணீஸை காப்பாற்ற முயன்ற போது, நீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டான். பின்னர், இது குறித்து உறவினர்களுக்கும் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் போலீஸார் பொதுமக்கள் துணையோடு தர்ணீஸின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 கிலோமீட்டர் அளவிற்குத் தேடியும் கிடைக்காததால் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.