வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் : உடலை தேடும் பணி தீவிரம்

திருப்பூர் அருகே வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவனைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவனைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 



பொங்கலூரை அடுத்த தொட்டம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் விஜயன். கூலி தொழிலாளியான இவருக்கு தர்ணீஸ் என்கிற மகனும், மகளும் உள்ளனர். மேலும், தர்ணீஸ் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவரும் நிலையில், இன்று பள்ளிக்கு செல்லாமல் மதியம் சுமார் 1 மணி அளவில் அருகில் உள்ள பி.ஏ.பி வாய்க்காலில் தனது தாத்தா முருகனுடன் குளிக்க சென்றதாகத் தெரிகிறது. இதனைக் கரை ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென தவறி வாய்க்கால் தண்ணீரில் விழுந்துள்ளான். 

இதனைக் கண்ட அவனது தாத்தா முருகன் அதிர்ச்சி அடைந்து தர்ணீஸை காப்பாற்ற முயன்ற போது, நீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டான். பின்னர், இது குறித்து உறவினர்களுக்கும் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் போலீஸார் பொதுமக்கள் துணையோடு தர்ணீஸின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 கிலோமீட்டர் அளவிற்குத் தேடியும் கிடைக்காததால் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...