பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - வனத்துறை அமைச்சர்

பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை அவர் கூறுகையில், " டான்டீ தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக தீர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

விரைவில், தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். சேரம்பாடி தனியார் எஸ்டேட்டில் அயனிபாலா மரங்கள் வெட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த மரங்கள் இயற்கையாக வளர்ந்தவை என்பதால், அந்த மரங்களை வெட்டத் தடை விதிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் மனித விலங்கு மோதல் அதிகரித்துள்ளது. விலங்குகளால், மனிதர்களுக்கும், மனிதர்களால் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது விலங்குகள் தாக்கி, உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழிகள் வெட்டப்படுகின்றன. கரடி, சிறுத்தைகள் ஊருக்குள் வராமல் தடுக்க கூண்டுகள் வைத்துப் பிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...