வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடக்கம் : யானை சவாரி ரத்து

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

நீலகிரி : முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். 



தமிழகத்தில் உள்ள கோயில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகளுக்கு ஆண்டுதோறும் நலவாழ்வு முகாம் அரசு நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்த முகாம், முதுமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டதால், கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு உட்பட்ட தேக்கம்பட்டிக்கு மாற்றப்பட்டது. இந்த முகாம் காலகட்டமான 48 நாட்கள் கோயில் மற்றும் மட யானைகளுடன் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும் ஓய்வு அளிக்கப்படும். இந்நிலையில், இந்தாண்டு 10-வது நலவாழ்வு முகாம் இன்று தொடங்கியது

.

முகாமை முன்னிட்டு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள முதுமலையில் (22), ஆனைமலையில் (23), அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் (4), சேலம் குரும்பர்பாடியில் (1) மற்றும் சாடிவயலில் (2) என மொத்தம் 52 வளர்ப்பு யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கப்படுகிறது. மதியம் முதுமலை தெப்பக்காட்டில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமையொட்டி, யானைகளுக்குக் கரும்பு, வாழை, தேங்காய் உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டன.

பின்னர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்போது, ‘முகாம் மார்ச் மாதம் 28-ம் தேதி வரை நடக்கும். இதற்காக ரூ. 61.016 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாணை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் காலதாமதாக இன்று தொடங்கப்பட்டது.’ என்றார். 

யானைகள் நலவாழ்வு முகாமை முன்னிட்டு நேற்று முதல் யானைகள் சவாரி ரத்து செய்யப்பட்டது. இதனால், முதுமலை வரும் சுற்றுலாப்பயணிகள் வாகனங்கள் மூலம் மட்டுமே சுற்றி பார்க்கலாம். முகாம் தொடக்க விழாவில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி, வன அலுவலர்கள் ராஜ்குமார், பி.கே.திலீப் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...