முறைகேடு புகார் காரணமாக கடந்த ஆண்டு செப்.,16-ல் நடந்த பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடு புகார் காரணமாக கடந்த ஆண்டு செப்.,16-ல் நடந்த பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பலர் முறைகேடாக பணம் கொடுத்து வேலைப் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், எழுத்து தேர்வுக்கான மறுதேதி மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டணத்தைச் செலுத்தியவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டதில் மோசடி நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தேர்வை நடத்திய டேடா என்ட்ரி நிறுவனம் மூலமாக மோசடி நடந்தது அம்பலமானது. பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பலர் முறைகேடாக பணம் கொடுத்து வேலைப் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், எழுத்து தேர்வுக்கான மறுதேதி மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டணத்தைச் செலுத்தியவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டதில் மோசடி நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தேர்வை நடத்திய டேடா என்ட்ரி நிறுவனம் மூலமாக மோசடி நடந்தது அம்பலமானது. பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.