அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர முடியவில்லை என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் : அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர முடியவில்லை என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தாராபுரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி "நிரந்தரமானவர் அழிவதில்லை" என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழக அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அரசால் காவிரி தண்ணீரைத் தமிழகத்திற்கு பெற்றுத் தர முடியவில்லை. தினந்தோறும் நீர்பங்கீடு செய்யவேண்டி உச்சநீதிமன்றத்தில் அரசு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், பேராசிரியர் மற்றும் கடைநிலை ஊழியர் பதவிகள் விற்கப்படுவது தொடந்து நடைபெறுகிறது. இது தொடர்பான விசாரணையை அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்." என்றார்.
தாராபுரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி "நிரந்தரமானவர் அழிவதில்லை" என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழக அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அரசால் காவிரி தண்ணீரைத் தமிழகத்திற்கு பெற்றுத் தர முடியவில்லை. தினந்தோறும் நீர்பங்கீடு செய்யவேண்டி உச்சநீதிமன்றத்தில் அரசு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், பேராசிரியர் மற்றும் கடைநிலை ஊழியர் பதவிகள் விற்கப்படுவது தொடந்து நடைபெறுகிறது. இது தொடர்பான விசாரணையை அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்." என்றார்.