கோவையில் பயிற்சி வனவர்களுக்கு நன்கு வளர்த்த மரங்களை இடமாற்றி நடுவது குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை : கோவையில் பயிற்சி வனவர்களுக்கு நன்கு வளர்த்த மரங்களை இடமாற்றி நடுவது குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓசை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு வனக்கல்லூரி வளாகத்தில், பயிற்சி வனவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 39 பயிற்சி வனவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மரத்தை மாற்றி நடுவது பற்றியும், அவ்வாறு மாற்றி நடப்பட்ட மரத்தை எப்படி பராமரிப்பது என்பது குறித்து வனவர்கள் எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, தடாகம் - காரமடை சாலையில் 15 ஆண்டுகள் பழமையான மரத்தை உயிருடன் மாற்றுவது குறித்த செயல்முறை விளக்கம் பயிற்சி வனவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்தப் பணியில் தமிழ்நாடு குடிநீர் விநியோகத் துறை, வடிகால் வாரியம், வனத்துறை மற்றும் காவல்துறை ஆகிய பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.


ஓசை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு வனக்கல்லூரி வளாகத்தில், பயிற்சி வனவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 39 பயிற்சி வனவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மரத்தை மாற்றி நடுவது பற்றியும், அவ்வாறு மாற்றி நடப்பட்ட மரத்தை எப்படி பராமரிப்பது என்பது குறித்து வனவர்கள் எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, தடாகம் - காரமடை சாலையில் 15 ஆண்டுகள் பழமையான மரத்தை உயிருடன் மாற்றுவது குறித்த செயல்முறை விளக்கம் பயிற்சி வனவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்தப் பணியில் தமிழ்நாடு குடிநீர் விநியோகத் துறை, வடிகால் வாரியம், வனத்துறை மற்றும் காவல்துறை ஆகிய பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.
