திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முள்காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முள்காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
பல்லடம் மங்கலம் சாலை தெற்குப்பாளையம் பிரிவு அருகே திருப்பூரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (58). இவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், கடும் வறட்சி காரணமாக விவசாயம் ஏதும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலத்தைச் சுற்றிலும் ஏராளமான மரங்கள், முட்கள் முளைத்து புதர்போல் மண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென அந்தக் காட்டில் தீ மளமளவெனப் பற்றி எரிந்தது. இதில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏராளமான முள் மரங்கள், புற்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பல்லடம் மங்கலம் சாலை தெற்குப்பாளையம் பிரிவு அருகே திருப்பூரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (58). இவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், கடும் வறட்சி காரணமாக விவசாயம் ஏதும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலத்தைச் சுற்றிலும் ஏராளமான மரங்கள், முட்கள் முளைத்து புதர்போல் மண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென அந்தக் காட்டில் தீ மளமளவெனப் பற்றி எரிந்தது. இதில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏராளமான முள் மரங்கள், புற்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.