திருப்பூரில் ஜவுளி ஆராய்ச்சியாளர் சந்திப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் மற்றும் நிப்ட்-டீ கல்லுாரியின் சார்பில் ஜவுளி ஆராய்ச்சியாளர் சந்திப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கியது.

திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் மற்றும் நிப்ட்-டீ கல்லுாரியின் சார்பில் ஜவுளி ஆராய்ச்சியாளர் சந்திப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கியது. 



அவினாசி - பழங்கரை சாலையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நடந்த இந்தக் கண்காட்சி அரங்கை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர் பனீந்தர்ரெட்டி திறந்து வைத்தார். டெக்ஸ்டைல் கமிட்டி உறுப்பினர் செயலர் அஜித் சவான், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இந்தியன் டெக்ஸ் பிரனர்ஸ் பெடரேஷன் கன்வீனர் பிரபுதாமோதரன், நிப்ட்- டீ கல்லுாரி தலைவர் முருகானந்தன் உள்பட தொழில் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். 



கோவை சிட்ரா தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம், பிட்ரா மும்பை ஜவுளி ஆராய்ச்சி கழகம், நிட்ரா வட இந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள், மத்திய பட்டுவாரியம், கிரேஷிம், ரிலையன்ஸ், பி.எஸ்.ஜி.,ன் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் சிறப்பு மையம் என பல்வேறு அமைப்புகள் 26 அரங்குகளில் ஜவுளித்துறை சார்ந்த கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன. 



மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட நுாலிழைகள், துணிகளின் மடியும் தன்மையை மிகநுட்பமாக ஆய்வு செய்யும் மெஷின், இயற்கை பொருட்களைக்கொண்ட தயாரிக்கப்பட்ட சாயங்கள், பட்டு நூலிழையில் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு ஆடை ரகங்கள், மருத்தவ ஜவுளி என புதுவகை ஜவுளிரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பின்னலாடை சேர்ந்த ஆராய்ச்சி மையங்களில் இருந்து ஆராய்ச்சியாளா்களை கொண்டு 2 நாள் தொழில் மேம்பாட்டைப் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...