திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் மற்றும் நிப்ட்-டீ கல்லுாரியின் சார்பில் ஜவுளி ஆராய்ச்சியாளர் சந்திப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கியது.
திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் மற்றும் நிப்ட்-டீ கல்லுாரியின் சார்பில் ஜவுளி ஆராய்ச்சியாளர் சந்திப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கியது.

அவினாசி - பழங்கரை சாலையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நடந்த இந்தக் கண்காட்சி அரங்கை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர் பனீந்தர்ரெட்டி திறந்து வைத்தார். டெக்ஸ்டைல் கமிட்டி உறுப்பினர் செயலர் அஜித் சவான், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இந்தியன் டெக்ஸ் பிரனர்ஸ் பெடரேஷன் கன்வீனர் பிரபுதாமோதரன், நிப்ட்- டீ கல்லுாரி தலைவர் முருகானந்தன் உள்பட தொழில் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கோவை சிட்ரா தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம், பிட்ரா மும்பை ஜவுளி ஆராய்ச்சி கழகம், நிட்ரா வட இந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள், மத்திய பட்டுவாரியம், கிரேஷிம், ரிலையன்ஸ், பி.எஸ்.ஜி.,ன் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் சிறப்பு மையம் என பல்வேறு அமைப்புகள் 26 அரங்குகளில் ஜவுளித்துறை சார்ந்த கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன.

மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட நுாலிழைகள், துணிகளின் மடியும் தன்மையை மிகநுட்பமாக ஆய்வு செய்யும் மெஷின், இயற்கை பொருட்களைக்கொண்ட தயாரிக்கப்பட்ட சாயங்கள், பட்டு நூலிழையில் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு ஆடை ரகங்கள், மருத்தவ ஜவுளி என புதுவகை ஜவுளிரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பின்னலாடை சேர்ந்த ஆராய்ச்சி மையங்களில் இருந்து ஆராய்ச்சியாளா்களை கொண்டு 2 நாள் தொழில் மேம்பாட்டைப் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.


அவினாசி - பழங்கரை சாலையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நடந்த இந்தக் கண்காட்சி அரங்கை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர் பனீந்தர்ரெட்டி திறந்து வைத்தார். டெக்ஸ்டைல் கமிட்டி உறுப்பினர் செயலர் அஜித் சவான், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இந்தியன் டெக்ஸ் பிரனர்ஸ் பெடரேஷன் கன்வீனர் பிரபுதாமோதரன், நிப்ட்- டீ கல்லுாரி தலைவர் முருகானந்தன் உள்பட தொழில் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கோவை சிட்ரா தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம், பிட்ரா மும்பை ஜவுளி ஆராய்ச்சி கழகம், நிட்ரா வட இந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள், மத்திய பட்டுவாரியம், கிரேஷிம், ரிலையன்ஸ், பி.எஸ்.ஜி.,ன் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் சிறப்பு மையம் என பல்வேறு அமைப்புகள் 26 அரங்குகளில் ஜவுளித்துறை சார்ந்த கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன.

மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட நுாலிழைகள், துணிகளின் மடியும் தன்மையை மிகநுட்பமாக ஆய்வு செய்யும் மெஷின், இயற்கை பொருட்களைக்கொண்ட தயாரிக்கப்பட்ட சாயங்கள், பட்டு நூலிழையில் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு ஆடை ரகங்கள், மருத்தவ ஜவுளி என புதுவகை ஜவுளிரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பின்னலாடை சேர்ந்த ஆராய்ச்சி மையங்களில் இருந்து ஆராய்ச்சியாளா்களை கொண்டு 2 நாள் தொழில் மேம்பாட்டைப் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
