ஜெயலலிதா மரண விவகாரம்: இளவரசியின் மகன் விவேக்கிற்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயா டிவியை நிர்வகித்து வரும் இளவரசியின் மகன் விவேக்கிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயா டிவியை நிர்வகித்து வரும் இளவரசியின் மகன் விவேக்கிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்தனர். பின்னர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என பலரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இளவரசியின் மகனான விவேக் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 13ஆம் தேதி விவேக் ஆஜராக வேண்டும் என விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம் வரும் 12-ஆம் தேதி முதல் மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அடுத்தவாரம் 4 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் ஜெயலலிதாவுடன் நீண்ட நாட்கள் இருந்தவர் என்பதால் அவரிடம் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. வரும் 12-ம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துகிறது. அப்பல்லோ மருத்துவர் பாலாஜியை வரும் 14-ம் தேதியும், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனை 15-ம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...