பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் ஐந்து பேருக்கு திடீர் வாந்தி மற்றும் மயக்கமடைந்தனர். இதனால், அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
கோவை : பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் ஐந்து பேருக்கு திடீர் வாந்தி மற்றும் மயக்கமடைந்தனர். இதனால், அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

கோவையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கான இரண்டு நாள் நினைவூட்டல் பயிற்சி நேற்று தாமஸ் கிளப் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்துள்ளது. இதனை அறியாமல் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மருத்துவ உதவியாளர்கள் அருணா, சசிகலா, நித்யா, ராணி திருமாத்தாள், கவிதா ஆகியோருக்கு வாந்தி ஏற்பட்டு, மயக்கமடைந்தனர். இந்த உணவை உண்ட ஐவரில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், மயக்கமடைந்த அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் முத்துராஜா பேசுகையில், "வருடத்திற்கு இருமுறை இரண்டு நாட்கள் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நேற்று தொடங்கி இன்றுடன் முடிகிறது. அரசு புத்தாக்கப் பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ. 150 என உணவுக்காக கொடுத்தாலும், இங்குத் தரக்குறைவான உணவு தான் வழங்கப்படுகிறது. உணவு விஷயத்தில் தொடர்ந்து நிர்வாகம் சீர்கேட்டோடு நடந்து வருகிறது. மதிய உணவில் வழங்கப்பட்ட சாப்பாட்டில் பல்லி கிடந்ததால், கர்ப்பிணிப் பெண் உள்பட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.” என்றார்.
மேலும், நிர்வாகத்திடம் இது குறித்து தெரியப்படுத்தி உள்ளதாகக் கூறிய அவர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிர்வாக தரப்பில் உறுதி அளித்துள்ளதாகவும், இதேபோன்று, முன்பு ஒருமுறை நடந்த போதும், நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களின் உயிரோடு விளையாடும் நிர்வாகத்தைக் கண்டிக்குமா தமிழக அரசு என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கான இரண்டு நாள் நினைவூட்டல் பயிற்சி நேற்று தாமஸ் கிளப் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்துள்ளது. இதனை அறியாமல் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மருத்துவ உதவியாளர்கள் அருணா, சசிகலா, நித்யா, ராணி திருமாத்தாள், கவிதா ஆகியோருக்கு வாந்தி ஏற்பட்டு, மயக்கமடைந்தனர். இந்த உணவை உண்ட ஐவரில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், மயக்கமடைந்த அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் முத்துராஜா பேசுகையில், "வருடத்திற்கு இருமுறை இரண்டு நாட்கள் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நேற்று தொடங்கி இன்றுடன் முடிகிறது. அரசு புத்தாக்கப் பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ. 150 என உணவுக்காக கொடுத்தாலும், இங்குத் தரக்குறைவான உணவு தான் வழங்கப்படுகிறது. உணவு விஷயத்தில் தொடர்ந்து நிர்வாகம் சீர்கேட்டோடு நடந்து வருகிறது. மதிய உணவில் வழங்கப்பட்ட சாப்பாட்டில் பல்லி கிடந்ததால், கர்ப்பிணிப் பெண் உள்பட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.” என்றார்.
மேலும், நிர்வாகத்திடம் இது குறித்து தெரியப்படுத்தி உள்ளதாகக் கூறிய அவர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிர்வாக தரப்பில் உறுதி அளித்துள்ளதாகவும், இதேபோன்று, முன்பு ஒருமுறை நடந்த போதும், நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களின் உயிரோடு விளையாடும் நிர்வாகத்தைக் கண்டிக்குமா தமிழக அரசு என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.