கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜீ. முருக பக்தரான இவர் பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்றார். பழனியை அடைந்த சிஜீ, அங்கிருந்து பேருந்து மூலம் தனது நண்பரைக் காண நேற்று திருப்பூர் வந்தார்.
திருப்பூர் : கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜீ. முருக பக்தரான இவர் பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்றார். பழனியை அடைந்த சிஜீ, அங்கிருந்து பேருந்து மூலம் தனது நண்பரைக் காண நேற்று திருப்பூர் வந்தார்.

தூக்கக் கலக்கத்தில் திருப்பூர் என நினைத்து அவிநாசிபாளையம் பகுதியில் இறங்கிய அவர் வழி தெரியாத காரணத்தால் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் சாலையோரம் கிணறு இருந்தது தெரியாமல் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
60 அடி ஆழக் கிணறு என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் அவர் எழுப்பிய குரல் யாருக்கும் கேட்கவில்லை. இரவு முழுவதும் கிணற்றிலேயே இருந்துள்ளார்.
இன்று காலை அப்பகுதி வந்தவர்கள் அவரது குரலை கேட்டு, அவிநாசிபாளையம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் கயிரை கட்டி இன்று காலை 12 மணியளவில் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் விழுந்து 12 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சிஜீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூக்கக் கலக்கத்தில் திருப்பூர் என நினைத்து அவிநாசிபாளையம் பகுதியில் இறங்கிய அவர் வழி தெரியாத காரணத்தால் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் சாலையோரம் கிணறு இருந்தது தெரியாமல் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
60 அடி ஆழக் கிணறு என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் அவர் எழுப்பிய குரல் யாருக்கும் கேட்கவில்லை. இரவு முழுவதும் கிணற்றிலேயே இருந்துள்ளார்.
இன்று காலை அப்பகுதி வந்தவர்கள் அவரது குரலை கேட்டு, அவிநாசிபாளையம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் கயிரை கட்டி இன்று காலை 12 மணியளவில் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் விழுந்து 12 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சிஜீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.