கிணற்றில் தவறி விழுந்து இரவு முழுவதும் தவித்த முருக பக்தர் : 12 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்பு

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜீ. முருக பக்தரான இவர் பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்றார். பழனியை அடைந்த சிஜீ, அங்கிருந்து பேருந்து மூலம் தனது நண்பரைக் காண நேற்று திருப்பூர் வந்தார்.

திருப்பூர் : கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜீ. முருக பக்தரான இவர் பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்றார். பழனியை அடைந்த சிஜீ, அங்கிருந்து பேருந்து மூலம் தனது நண்பரைக் காண நேற்று திருப்பூர் வந்தார். 



தூக்கக் கலக்கத்தில் திருப்பூர் என நினைத்து அவிநாசிபாளையம் பகுதியில் இறங்கிய அவர் வழி தெரியாத காரணத்தால் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் சாலையோரம் கிணறு இருந்தது தெரியாமல் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 

60 அடி ஆழக் கிணறு என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் அவர் எழுப்பிய குரல் யாருக்கும் கேட்கவில்லை. இரவு முழுவதும் கிணற்றிலேயே இருந்துள்ளார். 

இன்று காலை அப்பகுதி வந்தவர்கள் அவரது குரலை கேட்டு, அவிநாசிபாளையம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் கயிரை கட்டி இன்று காலை 12 மணியளவில் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கிணற்றில் விழுந்து 12 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சிஜீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...