மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார் நடிகை ஸ்ருதி

திருமண ஆசை காட்டி வாலிபர்களிடம் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ருதி மேலும் ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை: திருமண ஆசை காட்டி வாலிபர்களிடம் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ருதி மேலும் ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலத்தைச் சேர்ந்த பால முருகன் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 41 லட்சம் மோசடி செய்த வழக்கில் சினிமா நடிகை ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, பிரச்சன்ன வெங்கடேஷ், சுபாஷ் ஆகிய 4 பேர் கடந்த ஜனவரி 11-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல இளைஞர்களை ஏமாற்றி கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக அடுத்தடுத்து நடிகை ஸ்ருதி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. 

இதனிடையே நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள ஸ்ருதி உள்ளிட்ட 4 பேர் காவல் துறையினரைத் தாக்கிய வழக்கிலும், கடந்த 2016-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரிடம் ரூ.43 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் கடந்த ஜனவரி 31-ம் தேதி ஸ்ருதி, சித்ரா ,பிரச்சன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் நடிகை ஸ்ருதியை நாகப்பட்டினம் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதற்கான உத்தரவைச் சிறையில் உள்ள நடிகை ஸ்ருதியிடம் போலீசார் வழங்கினர். இந்த வழக்கு தொடர்பாக அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் நாகப்பட்டினம் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதுவரை நடிகை ஸ்ருதி அடுத்தடுத்து 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...