திருமண ஆசை காட்டி வாலிபர்களிடம் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ருதி மேலும் ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: திருமண ஆசை காட்டி வாலிபர்களிடம் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ருதி மேலும் ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த பால முருகன் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 41 லட்சம் மோசடி செய்த வழக்கில் சினிமா நடிகை ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, பிரச்சன்ன வெங்கடேஷ், சுபாஷ் ஆகிய 4 பேர் கடந்த ஜனவரி 11-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல இளைஞர்களை ஏமாற்றி கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக அடுத்தடுத்து நடிகை ஸ்ருதி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனிடையே நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள ஸ்ருதி உள்ளிட்ட 4 பேர் காவல் துறையினரைத் தாக்கிய வழக்கிலும், கடந்த 2016-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரிடம் ரூ.43 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் கடந்த ஜனவரி 31-ம் தேதி ஸ்ருதி, சித்ரா ,பிரச்சன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் நடிகை ஸ்ருதியை நாகப்பட்டினம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதற்கான உத்தரவைச் சிறையில் உள்ள நடிகை ஸ்ருதியிடம் போலீசார் வழங்கினர். இந்த வழக்கு தொடர்பாக அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் நாகப்பட்டினம் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதுவரை நடிகை ஸ்ருதி அடுத்தடுத்து 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தைச் சேர்ந்த பால முருகன் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 41 லட்சம் மோசடி செய்த வழக்கில் சினிமா நடிகை ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, பிரச்சன்ன வெங்கடேஷ், சுபாஷ் ஆகிய 4 பேர் கடந்த ஜனவரி 11-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல இளைஞர்களை ஏமாற்றி கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக அடுத்தடுத்து நடிகை ஸ்ருதி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனிடையே நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள ஸ்ருதி உள்ளிட்ட 4 பேர் காவல் துறையினரைத் தாக்கிய வழக்கிலும், கடந்த 2016-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரிடம் ரூ.43 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் கடந்த ஜனவரி 31-ம் தேதி ஸ்ருதி, சித்ரா ,பிரச்சன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் நடிகை ஸ்ருதியை நாகப்பட்டினம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதற்கான உத்தரவைச் சிறையில் உள்ள நடிகை ஸ்ருதியிடம் போலீசார் வழங்கினர். இந்த வழக்கு தொடர்பாக அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் நாகப்பட்டினம் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதுவரை நடிகை ஸ்ருதி அடுத்தடுத்து 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.