தெர்மாகோலுக்கு செல்லூர் ராஜு, சோப்பு நுரைக்கு கருப்பண்ணன்., இப்போது, மக்கள் தொகைக்கு செங்கோட்டையன்..!

மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவுக்குக் காரணம் என்று கூறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.சி. கருப்பண்ணன் வரிசையில் இடம்பிடித்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவுக்குக் காரணம் என்று கூறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.சி. கருப்பண்ணன் வரிசையில் இடம்பிடித்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். 

தேக்கி வைக்கப்பட்ட நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல்களை பயன்படுத்தும் மாபெரும் திட்டத்தால் பிரபலமானவர் அமைச்சர் செல்லூர் ராஜு. " கோவை மக்கள் சோப்பு போட்டுக் குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வருகிறது" என்று கூறி அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கவைத்துப் பிரபலமடைந்தவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன். 

மக்கள் நலப்பணிகள் செய்து பிரபலமான அமைச்சர்களைக் காட்டிலும், இது போன்று வேடிக்கையான கருத்துக்களாலும், திட்டங்களாலும் பிரபலமான அமைச்சர்களே அதிகம். அந்த வரிசையில் தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் இடம் பிடித்துள்ளார். 

வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார் அமைச்சர் செங்கோட்டையன். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " இந்தாண்டு 8 லட்சத்து 67 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வும், 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காகக் கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் 'காப்பி' அடிப்பதைத் தடுக்க தேர்வு மையங்களில் பறக்கும்படை மற்றும் கூடுதல் ஆசிரியர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். " என்றார். 

தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியை செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டனர். அதற்கு, " மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணம் " என்று அடேங்கப்பா பதிலை கொடுத்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். 

அடுத்தடுத்து செய்தியாளர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்க, சுதாரித்துக் கொண்ட அமைச்சர், " வரும் கால கட்டங்களில் அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வித்தரம் மேம்படும். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் " என்று கூறி எஸ்கேப் ஆனார். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...