காஞ்சிபுரத்தில் போதகர் கிதியோன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லடம்: காஞ்சிபுரத்தில் போதகர் கிதியோன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் திருப்பூர் மாவட்ட தலைவர் தமிழ்முத்து தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் அடையாளச்சேரியில் போதகர் கிதியோனை படுகொலை செய்த மதவாத சக்திகளை கண்டித்தும், பல்லடம் சரகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துவ ஆலயங்கள் தாக்கப்படுவது போன்ற செயல்களைக் கண்டித்து திருப்பூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை மற்றும் பல்லடம் சரகம் அனைத்து போதகர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, சபை ஊழியர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாத தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், கொலைவெறித் தாக்குதல் மீதான நடவடிக்கை, சிறுபான்மையின மக்கள் மீதான மதரீதியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முதன்மை செயலாளர் பாவரசு, மாநில து. செயலாளர் கிப்டன் டேவிட்பால் உட்பட ஏராளமான நிர்வாகிகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் திருப்பூர் மாவட்ட தலைவர் தமிழ்முத்து தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் அடையாளச்சேரியில் போதகர் கிதியோனை படுகொலை செய்த மதவாத சக்திகளை கண்டித்தும், பல்லடம் சரகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துவ ஆலயங்கள் தாக்கப்படுவது போன்ற செயல்களைக் கண்டித்து திருப்பூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை மற்றும் பல்லடம் சரகம் அனைத்து போதகர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, சபை ஊழியர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாத தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், கொலைவெறித் தாக்குதல் மீதான நடவடிக்கை, சிறுபான்மையின மக்கள் மீதான மதரீதியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முதன்மை செயலாளர் பாவரசு, மாநில து. செயலாளர் கிப்டன் டேவிட்பால் உட்பட ஏராளமான நிர்வாகிகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.