முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ., ஆவணங்கள்: அதிர்ச்சி தகவல்

ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் தொடர்பான சி.பி.ஐ.,யின் ரகசிய ஆவணம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீட்டில் சிக்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் தொடர்பான சி.பி.ஐ.,யின் ரகசிய ஆவணம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீட்டில் சிக்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

பல கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் வழக்கில் பல்வேறு விசாரணைகள் நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த விசாரணையில் எவ்வித ஆவணங்களும் எடுத்துச் செல்லப்படவில்லை என சிதம்பரம் கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., நிலவர அறிக்கையின் நகல் சிதம்பரம் வீட்டில் இருந்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த 2013ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகும். இது சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும். இவ்வாறான ரகசிய ஆய்வறிக்கை சிதம்பரம் வீட்டுக்கு எப்படி சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. 

ஏர்செல் - மேக்ஸிஸ் ஊழல் வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்குத் தொடர்பிருப்பதாக வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...