கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரவீந்திரனை 22-ம் தேதி வரை காவலில் விசாரிக்க தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரவீந்திரனை 22-ம் தேதி வரை காவலில் விசாரிக்க தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த மாணவி கடந்த இரண்டு மாதங்களாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஏ.ஆர்.ஆர் என்ற மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி காலை மாணவிக்கு இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தி ரவீந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையறிந்த உடன் பணிபுரியும் பயிற்சி செவிலியர்கள், கோவை உக்கடத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் ரவீந்திரனை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். அவர் இன்று தனிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மருத்துவர் ரவீந்தரனுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை தனிநீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவரை போலீஸார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.