ஐ லீக் கால்பந்து போட்டியில் சென்னை, மோகன் பகன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் சிறப்பாக ஆடிய சென்னை அணி வீரர் ஜீன் மைக்கேல் ஜோக்கியத்திற்கு மாநகராட்சி ஆணையர் விருது வழங்கினார்.
கோவை: ஐ லீக் கால்பந்து போட்டியில் சென்னை, மோகன் பகன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் சிறப்பாக ஆடிய சென்னை அணி வீரர் ஜீன் மைக்கேல் ஜோக்கியத்திற்கு மாநகராட்சி ஆணையர் விருது வழங்கினார்.

கோவை நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்கக் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால், எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் எந்தவித கோல்களுமின்றி ஆட்டம் சமனில் முடிந்தது. போட்டியின் முடிவில் சிறப்பாக ஆடிய சென்னை வீரர் ஜீன் மைக்கேல் ஜோக்கியற்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் விருது மற்றும் ரூ.25,000-க்கான காசோலையை வழங்கினார். இ.ஏ.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் எஸ்.பி. அன்பரசன் உடனிருந்தார்.

கோவை நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்கக் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால், எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் எந்தவித கோல்களுமின்றி ஆட்டம் சமனில் முடிந்தது. போட்டியின் முடிவில் சிறப்பாக ஆடிய சென்னை வீரர் ஜீன் மைக்கேல் ஜோக்கியற்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் விருது மற்றும் ரூ.25,000-க்கான காசோலையை வழங்கினார். இ.ஏ.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் எஸ்.பி. அன்பரசன் உடனிருந்தார்.