ஆசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட ஆசிய கண்டங்களில் உள்ள நாடுகளில் சிறந்த 350 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவைகளின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 4 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றில், கோவையைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், உத்தரகாண்டைச் சேர்ந்த ஜிபி பாண்ட் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளன.
இது தொடர்பான தகவல்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட ஆசிய கண்டங்களில் உள்ள நாடுகளில் சிறந்த 350 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவைகளின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 4 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றில், கோவையைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், உத்தரகாண்டைச் சேர்ந்த ஜிபி பாண்ட் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளன.
இது தொடர்பான தகவல்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.