கோவை மாநகராட்சியின் 76-வது வார்டு பகுதியில் ரூ. 73 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சியின் 76-வது வார்டு பகுதியில் ரூ. 73 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
தெற்கு மண்டலம் 76-வது வார்டுக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர் மற்றும் எம்.எம்.ஆர். கார்டன் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, வள்ளலார் நகர் மற்றும் குழந்தை நாயக்கர் வீதியில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 42 லட்சம் செலவிலான மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையையும் அவர் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் உள்ளனர்.
தெற்கு மண்டலம் 76-வது வார்டுக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர் மற்றும் எம்.எம்.ஆர். கார்டன் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, வள்ளலார் நகர் மற்றும் குழந்தை நாயக்கர் வீதியில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 42 லட்சம் செலவிலான மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையையும் அவர் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் உள்ளனர்.