கோடைகாலம் ஆரம்பமானதால் திருப்பூரில் களைக்கட்ட தொடங்கியது தர்பூசணி விற்பனை

தமிழகம் முழுவதும் கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கத்தை தணிக்கும் தர்பூசணியின் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கத்தை தணிக்கும் தர்பூசணியின் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 



திருப்பூரில் தற்போது தர்பூசணி பழம் விற்பனை தொடங்கியுள்ளது. பொதுவாகக் கோடைக்காலம் என்றால் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிடும். வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான பொருளை தேடுவது வழக்கம். அதில், ஏழை, எளிய மக்களும், அனைவரும் வாங்கி சாப்பிடக்கூடிய ஒன்று தர்பூசணிபழம். விலைக்குறைவாகவும் உள்ளதால் மக்களும் அதிகம் வாங்கி செல்கின்றனர். 



தர்பூசணி விற்பனை பற்றி கடை உரிமையாளர்கள் நாகராஜ் மற்றும் பெரியசாமி அவர்களிடம் கேட்ட போது, ”கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சீசன் சீக்கிரம் ஆரம்பமாகி விட்டது. பெரும்பாலும் பழங்கள் திண்டிவனம், உடுமலை, ஆண்டிப்பட்டி, தாராபுரம், பாண்டிச்சேரி, ஈ.சி.ஆர், கல்பாக்கம் போன்ற பகுதியில் இருந்து வரும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பமான சீசன் இந்த முறை ஜனவரியில் துவங்கி விட்டது. மேலும், பழங்கள் வரத்து அதிகமாக உள்ளது. அதற்கேற்ற விற்பனையும் உள்ளது. மேலும், மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகம் வாங்கி சாப்பிடுவதால் விற்பனை அதிக அளவில் உள்ளது. 

கடந்த ஆண்டு கிலோ ரூ. 15 மற்றும் ரூ. 16-க்கு வாங்கிய பழங்கள் இந்த ஆண்டு ரூ. 12-க்கு வாங்குகிறோம். சீசன் தற்போது தான் ஆரம்பமானதால் இன்னும் வரும் காலங்களில் விலை அதிகரிக்கலாம்”, என்றனர். 



தர்பூசணி பழங்களை சுவைக்க வந்த பகவதி, சந்துரு, மற்றும் சின்னச்சாமி ஆகியோரிடம் கேட்ட போது, கோடை காலம் ஆரம்பமானதால் சூட்டை தணிக்க குளிர்ச்சிக்கு தர்பூசணி பழங்கள் தினம் வாங்கி சாப்பிடுகிறோம். மேலும், மற்ற குளிர்பானங்களின் விலை அதிகமாக இருப்பதால் அவற்றோடு ஒப்பிடுகையில் தர்பூசணி பழத்தின் விலை ரூ. 10-க்கு கிடைப்பதால் ஏழை, எளிய மக்களும் வாங்கி சாப்பிட முடிகிறது. மேலும், விலை குறைவாக இருப்பதால் வீட்டிற்கு முழுப் பழங்களை வாங்கி செல்கிறோம். கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் இந்த வகை தர்பூசணி பழங்களை அனைவரும் வாங்கி சாப்பிட வேண்டும். இவ்வாறு கூறினர். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...