யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நீராவி எஞ்சினை மீண்டும் இயக்க முடிவு

யுனெஸ்கோவின் உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: யுனெஸ்கோவின் உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 



1918 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம், குன்னூர் மற்றும் உதகை மலை ரயில் பாதையில் நிலக்கரி மூலம் இயக்கப்பட்ட நீராவி எஞ்சின் (எண் 37384) இழுவை திறன் குறைந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு, மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த எஞ்சினுக்கு ஓய்வளிக்கப்பட்டு குன்னூர் மலை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 



இந்த நிலையில், உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பழமை வாய்ந்த புராதான முக்கியத்துவம் பெற்ற இந்த ரயில் எஞ்சின் பெருமையை இன்றைய சமுதாயம் அறிந்து கொள்வதோடு, பெருகிவரும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ரயில்வே வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதையடுத்து, குன்னூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இந்த எஞ்சின் கொதிகலன் சோதனை செய்யப்பட்டு, இழுவை திறன் கண்டறியப்பட்ட பின்னர் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும் என்றும், சோதனை ஓட்டம் திருப்தியாக இருப்பின் ரயில்வே வாரிய ஒப்புதலுடன் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...