நீலகிரியில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியினர் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.
நீலகிரி : நீலகிரியில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியினர் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி உதகையில் நேற்று துவங்கியது, தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் மற்றும் சுடரொளி மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 'ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு மற்றும் மதுரை என்ற இரு அணிகள் மோதின.
இந்த இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டுக்கு ஒன்று என்ற வித்தியாசத்தில் மது அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்குக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தென் மண்டல பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி உதகையில் நேற்று துவங்கியது, தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் மற்றும் சுடரொளி மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 'ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு மற்றும் மதுரை என்ற இரு அணிகள் மோதின.
இந்த இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டுக்கு ஒன்று என்ற வித்தியாசத்தில் மது அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்குக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தென் மண்டல பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.