சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கியதால், மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
திருப்பூர்: சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கியதால், மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

சில்லென்ற பனிக்காலம் நிறைவடைந்து, சுட்டெரிக்கும் கோடை காலம் துவங்கியுள்ளது. கோடைகாலம் என்றாலே நம் நினைவிற்கு வருவது, இயற்கை அன்னையின் இனிய பரிசான தர்பூசணி பழங்கள்தான். கோடை காலம் ஆரம்பமானதையொட்டி, திருப்பூரில் தர்பூசணி பழங்களின் விற்பனை துவங்கியுள்ளது. தாராபுரம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பழங்கள் வர துவங்கியுள்ளது. தர்பூசணி பழம் கிலோ ஒன்றுக்கு ரூ. 15-லிருந்து ரூ. 25 வரை விற்கப்படுகிறது. குழந்தைகள் அதிகளவில் விரும்பி சாப்பிடும் பழமான தர்பூசணி பழத்தின் விற்பனை திருப்பூர் மாநகர் முழுவதும் பரவலாக துவங்கியுள்ளது.