பயணிகளை மதிக்காமல் நடந்துகொண்ட தனியார் பேருந்து நடத்துநர் மற்றும் ஒட்டுநர் மீது வழக்குப்பதிவு

பயணிகளை தரக்குறைவாக நடத்தியாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பயணி அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவை: பயணிகளை தரக்குறைவாக நடத்தியாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பயணி அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

கோவை - மேட்டுப்பாளையம் இடையே நாள்தோறும் பல ஆயிரம் பயணிகள் வேலைக்கு செல்ல தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகளிடையே தனியார் பேருந்து நடத்துநர்கள் மீதி சில்லறை தராமலும், தரக்குறைவான வார்த்தைகளாலும் பேசி வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அதேபோல, ஒரு சம்பவம் தான் கடந்த சனிக்கிழமை மதியம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பேராசிரியர் எம். ஜெயக்குமாருக்கு நடந்துள்ளது. 

இது குறித்து அவர் கூறுகையில், "பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேட்டுப்பாளையம் செல்வதற்காக தனியார் பேருந்தில் (SB_டிரான்ஸ்போர்ட் TN 66 F 5271) பயணித்தேன். பேருந்தில் மொத்தமாக 21 பேர் மட்டுமே பயணித்த நிலையில், யாருக்குமே மீதி பணத்தை தரவில்லை. நான் ரூ. 50 கொடுத்து இரண்டு டிக்கெட் பெற்றேன். ரூ. 26 கட்டணம். உடனே என்னிடம் ஒரு ரூபாய் சில்லறை கேட்டு பெற்ற நடத்துநர், மீதி தொகையான 25 ரூபாயை மூன்று முறை கேட்டும் அப்புறம் தர்றேன் எனக் கூறினார். ஆனால், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்து சேரும் வரையில் தரவில்லை.

உடனே நான் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடத்துநரிடம் கேட்டேன். இத்தனை முறை மீதி தொகைக்காக கெஞ்சனுமா என்றதும், இருந்தா தான் குடுப்போம் என்றார். மற்ற பயணிகளும் சில்லறை வேண்டி கேட்ட போது வாய்த் தகராறு செய்த நடத்துநர் சேக்பரீத், தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டே இருந்தார். மேலும், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் SB பேருந்தின் ஓட்டுநர் சரவணக்குமார் அச்சில் ஏற்ற முடியாத தகாத வார்த்தைகளை பெண்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேசினார்” என்றார்.

மேலும், இச்சம்பவம் குறித்து பயணி ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே, தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், 40 நிமிடத்தில் கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்ல வேண்டும் என இலக்கு வைத்து பேருந்து ஓட்டுநர்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது, இதன் காரணமாகவே, நடத்துநர்களும் அவர்களது கோபத்தை மக்களிடம் காட்டுகின்றனர். இதனை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும், என்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...