திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கே.வி.ஆர் நகர் வாய்க்கால் மேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மத்திய காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் அனுபல்லவி தலைமையில் வாய்க்கால் மேடு பகுதிக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த செல்வி, சுகுணா என்ற இரு பெண்களையும் அவர்களிடம் கஞ்சா வாங்கி வேறு இடங்களில் விற்பனை செய்யும் சக்திவேல் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த அரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட மூவரையும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கே.வி.ஆர் நகர் வாய்க்கால் மேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மத்திய காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் அனுபல்லவி தலைமையில் வாய்க்கால் மேடு பகுதிக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த செல்வி, சுகுணா என்ற இரு பெண்களையும் அவர்களிடம் கஞ்சா வாங்கி வேறு இடங்களில் விற்பனை செய்யும் சக்திவேல் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த அரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட மூவரையும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.