கோவை ஈச்சனாரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீர்ப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை ஈச்சனாரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவானந்தாகாலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (62). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தனது மனைவி இந்திராணி மற்றும் மாமியார் மாரியம்மாள் ஆகியோருடன் கோவையில் இறந்து கார் மூலமாக புறப்பட்டு பொள்ளாச்சியை அடுத்த மலையாண்டி பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
இவர்களது கார் ஈச்சனாரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தேவராஜனும் அவரது குடும்பத்தினரும் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு இறங்கினர்.
இந்த நிலையில், காரில் இருந்த ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ. 7 ஆயிரம் ரொக்கத்தோடு கார் முற்றிலுமாக தீயில் கருகி நாசமாகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர்.