நீட் தேர்வில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் பயிற்சிகள் : அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு பெறும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் செய்யப்படுவதாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை : நீட் தேர்வில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு பெறும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் செய்யப்படுவதாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால்  பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றது. குறிப்பாக, நீட் தேர்விற்கு மாணவர்களைத் தயார்படுத்த 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் போட்டி தேர்வை சந்திக்க தேவையான வசதிகளையும் ஏற்படுத்துவதோடு, மொபைல் ஆப் மூலம் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பயிற்சி மையங்களில் 70,420 பேர் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்பட்டு, பென் டிரைவ் மூலம் பயிற்சி அளிக்கப்படும். 

2,000 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சென்னையில் 18 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பெறும் வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்படுவார்கள். அதேவேளையில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையில் மாற்றமில்லை. இருப்பினும், மத்திய அரசு கொண்டுவரும் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். நீட் தேர்விற்காக 412 மையங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சி அளிக்கின்றது.

ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பள்ளிக் கல்வித்துறை வெளிப்படையாக செயல்பட்டு வருகின்றது. மேலும், "கனவு ஆசிரியர் விருது" பெறுவதற்கான காலஅவகாசம் வழங்கப்படவேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கை  பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்குப் பிறகு, அமைச்சர் செங்கோட்டையன் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...