விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள், திட்டங்களை அறிவித்த ஏ.ஏ.ஐ.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்களை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் (ஏ.ஏ.ஐ) அறிவித்துள்ளது.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்களை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் (ஏ.ஏ.ஐ) அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் பேட்மிண்டன், செஸ், கோ-கோ, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக சப்-ஜுனியர், ஜுனியர், சீனியர் அளவில் தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கான ஒரு அறிவிப்பை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மேற்கண்ட போட்டிகளில், விதிமுறைகளுக்குட்பட்டு தகுதியான வீரர்களைத் தேர்வு செய்து, இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு கீழ் உள்ள அணிகளில் விளையாட அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு, தேவையான பயணப்படிகள், மாதப்படிகள் என அனைத்து செலவுகளுக்கும் தொகை வழங்கப்படும். 

இதேபோல, 14 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு கீழ் உள்ள அணிகளில் விளையாடி வருபவர்கள், விமானப் போக்குவரத்து துறையில் தற்காலிக ஊழியர்களாகவும் பணியமர்த்தப்படுவர். பின்னர், திறமை மற்றும் பணி வாய்ப்பின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்களாக பணிமாற்றம் செய்யப்படுவர். தகுதியுடையவர்கள் இதற்கான விண்ணப்பத்தை 19-ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...