தகராறை தடுக்க வந்தவரை கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதித்து கோவை மாவட்ட வது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோவை : தகராறை தடுக்க வந்தவரை கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதித்து கோவை மாவட்ட வது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கார்த்திகேயனை கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்ததாக சகோதரர்கள் தங்கராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான, வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஜயா. தங்கராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்திக்கு 7 ஆண்டு சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதே வழக்கில், கைது செய்யப்பட்ட தங்கராஜின் தந்தை, தாய், மற்றொரு சகோதரர் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கார்த்திகேயனை கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்ததாக சகோதரர்கள் தங்கராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான, வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஜயா. தங்கராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்திக்கு 7 ஆண்டு சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதே வழக்கில், கைது செய்யப்பட்ட தங்கராஜின் தந்தை, தாய், மற்றொரு சகோதரர் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.