தகராறின் போது தடுக்க வந்தவரைக் கொலை செய்த வழக்கு : சகோதரர்களுக்கு சிறை தண்டனை

தகராறை தடுக்க வந்தவரை கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதித்து கோவை மாவட்ட வது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை : தகராறை தடுக்க வந்தவரை கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதித்து கோவை மாவட்ட வது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கார்த்திகேயனை கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்ததாக சகோதரர்கள் தங்கராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான, வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஜயா. தங்கராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்திக்கு 7 ஆண்டு சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதே வழக்கில், கைது செய்யப்பட்ட தங்கராஜின் தந்தை, தாய், மற்றொரு சகோதரர் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...