அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை: அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எந்தக் காரணமும் சொல்லாமல் என்னை அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர். என்னை ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எனக்கு துரோகம் செய்து விட்டனர். 10 ஆண்டுகள் தொழிற்சங்க செயலாளராக இருந்து 10 லட்சம் உறுப்பினர்களை அ.தி.மு.க. தொழிற்சங்கத்தில் சேர்த்துள்ளேன். 14 கோடி ரூபாய் தொழிற்சங்க கணக்கில் நிதி சேர்த்துக்கொடுத்துள்ளேன். ஆனால், எந்த விளக்கமும் கேட்காமல் என்னை நீக்கியுள்ளனர். இது தொடர்பாக,கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
சென்னைக்குச் சென்று சிலரைச் சந்தித்த பின்னர் அடுத்தகட்ட முடிவெடுக்க இருக்கிறேன். கடந்த வெள்ளிக்கிழமை மாலை அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து சின்னச்சாமி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.