அரசின் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



திருப்பூரிலிந்து டிசம்பர் மாதம் 26-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் திருப்பூரிலிருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். தாராபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, அரசுப் பேருந்து பக்தர்கள் மீது மோதியது. இச்சம்பவத்தில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு தலா ஒருலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசு அறிவித்தது. 

இந்த நிலையில், பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

அந்த மனுவில், உயிரிழந்த குடும்பத்தினரை இதுவரை எந்தஒரு அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வழங்கவுள்ள ஒரு லட்சம் தங்கள் குடும்பத்திற்கு போதாது. ரூ. 25 லட்சம் வழங்கிட வேண்டும். தங்கள் குடும்பத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவினை அரசு ஏற்க வேண்டும். திருப்பூரிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நடைமேடை அமைத்துத் தர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசு உடனே செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...