வேளாண்மை பொறியியல் துறையில் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற்பழகுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை: வேளாண்மை பொறியியல் துறையில் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற்பழகுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவிக்கையில், கோவை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில், உதவி செயற்பொறியாளர் இயந்திர கலப்பை பணிமனை, கோவை அலுவலகத்தின் பணிமனையில் அரசு அங்கீகாரம் பெற்ற அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற நபர்கள் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற் பழகுநர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வெல்டர்-2 எண்கள், பிட்டர்-2 எண்கள் மற்றும் டிராக்டர் மெக்கானிக்-1 எண் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், கல்வித்தகுதி ஆவணங்கள் (நகல்), முகவரி, புகைப்படத்துடன் கூடிய விபரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை ஒளிம நகலுடன் சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையில் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, இயந்திர கலப்பை பணிமனை, மருதமலைரோடு, கோவை - 641003 என்ற முகவரிக்கு வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், அரசால் மேற்குறித்த பிரிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி கால ஊக்கத்தொகை மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.