வால்பாறையில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற 6 பேருக்கு அபராதம் விதித்தது வனத்துறை

வால்பாறை பகுதியில் காட்டுப்பன்றியை வலை வீசிப் பிடித்து வேட்டையாடி முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

வால்பாறை: வால்பாறை பகுதியில் காட்டுப்பன்றியை வலை வீசிப் பிடித்து வேட்டையாடி முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். 

வால்பாறை டோபி காலணி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சோலையார் எஸ்டேட் பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயற்சி செய்வதாக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்தத் தகவலின் பேரில் வானவர் ஆனந்தன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, வலை வீசி காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயற்சி செய்த வெள்ளிங்கிரி-யையும், அவரது நண்பர்களான ராமர், சரவணன், சிவக்குமார், பெரியசாமி, செந்தில் ஆகிய 6 போரையும் பிடித்தனர். 

இதைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் சுப்பையா உத்தரவின் பேரில் வன உயிரினங்களை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக அவர்கள் 6 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...