வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் மரங்களை நட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் இன்று வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் இன்று வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. 



வெள்ளலூர் குளக்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குளத்தைச் சுற்றியுள்ள கரைப் பகுதியில் அடர்த்தியான முறையில் மரங்களை வளர்க்கும் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் குளக்கரையை சுற்றி 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



இது குறித்த ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "மியாவாக்கி முறையில் குளத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நடவு செய்யும் போது நிலத்தடி நீர்மட்டமானது உயர்கிறது. குளத்தை நம்பி உயிர்வாழும் பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் இது உறைவிடமாக அமையும்" என்றனர். 

இந்த நிகழ்ச்சியில், சமூக ஆர்வளர் A.P.அன்பரசன், கோயம்புத்தூர் ரோட்டரி கிளப்பை சேர்ந்த C.R.துரை ராஜ், வெள்ளலூர் பஞ்சாத்தின் முன்னாள் தலைவர் மருதாச்சலம், சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...