கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் இன்று வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் இன்று வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

வெள்ளலூர் குளக்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குளத்தைச் சுற்றியுள்ள கரைப் பகுதியில் அடர்த்தியான முறையில் மரங்களை வளர்க்கும் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் குளக்கரையை சுற்றி 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இது குறித்த ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "மியாவாக்கி முறையில் குளத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நடவு செய்யும் போது நிலத்தடி நீர்மட்டமானது உயர்கிறது. குளத்தை நம்பி உயிர்வாழும் பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் இது உறைவிடமாக அமையும்" என்றனர்.
இந்த நிகழ்ச்சியில், சமூக ஆர்வளர் A.P.அன்பரசன், கோயம்புத்தூர் ரோட்டரி கிளப்பை சேர்ந்த C.R.துரை ராஜ், வெள்ளலூர் பஞ்சாத்தின் முன்னாள் தலைவர் மருதாச்சலம், சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


வெள்ளலூர் குளக்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குளத்தைச் சுற்றியுள்ள கரைப் பகுதியில் அடர்த்தியான முறையில் மரங்களை வளர்க்கும் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் குளக்கரையை சுற்றி 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இது குறித்த ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "மியாவாக்கி முறையில் குளத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நடவு செய்யும் போது நிலத்தடி நீர்மட்டமானது உயர்கிறது. குளத்தை நம்பி உயிர்வாழும் பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் இது உறைவிடமாக அமையும்" என்றனர்.
இந்த நிகழ்ச்சியில், சமூக ஆர்வளர் A.P.அன்பரசன், கோயம்புத்தூர் ரோட்டரி கிளப்பை சேர்ந்த C.R.துரை ராஜ், வெள்ளலூர் பஞ்சாத்தின் முன்னாள் தலைவர் மருதாச்சலம், சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
