திருச்சி - சேலம் இடையே பயணிகள் சிறப்பு ரயில் அறிவிப்பு

ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சேலம் பிராந்திய ரயில்வே மேலாளர் ஸ்ரீ ஹரி சங்கர் கூறுகையில்,  திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் 5-ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த ரயில்சேவையானது, ஞாயிற்றுக்கிழமையைத் தவிர வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன. திருச்சி - கரூர் பயணிகள் ரயில் நாமக்கல் வழியாக சேலம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில்சேவை சோதனை ஓட்டமாக 3 மாத காலம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு கூறினார். 

திருச்சி - சேலம் இடையே ரயில்சேவை:

திருச்சி - கரூர் பயணிகள் ரயில் (எண் - 76833) (நீட்டிக்கப்பட்ட சேவை) :  திருச்சியில் இருந்து புறப்படும் நேரம் காலை 09.35 மணி. கரூர் சென்றடையும் நேரம் காலை 11.35 மணி.

கரூர் - சேலம் சிறப்பு பயணிகள் ரயில் (எண் - 06833) : கரூரில் இருந்து புறப்படும் நேரம் காலை 11.40. சேலத்திற்கு சென்றடையும் நேரம் பிற்பகல் 01.20 மணி.

சேலம் - திருச்சி இடையேயான ரயில்சேவை:

சேலம் - கரூர் பயணிகள் சிறப்பு ரயில் (எண் - 76833) : சேலத்தில் இருந்து புறப்படும் நேரம் பிற்பகல் 01.30 மணி. கரூர் சென்றடையும் நேரம் பிற்பகல் 03.20 மணி.

கரூர் - திருச்சி சிறப்பு பயணிகள் ரயில் (எண் - 06833) (நீட்டிக்கப்பட்ட சேவை): கரூரில் இருந்து புறப்படும் நேரம் மாலை 03.30 மணி. திருச்சிக்கு சென்றடையும் நேரம் மாலை 05.35 மணி.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...