திருப்பூரில் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் அனுமதி

திருப்பூரில் விடுதி உணவு ஒவ்வாமையால் செவிலியர் பயிற்சி மாணவிகள் 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் விடுதி உணவு ஒவ்வாமையால் செவிலியர் பயிற்சி மாணவிகள் 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 



தாராபுரத்தை அடுத்த தெக்காலூரில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் விடுதி மாணவியர் 60 பேர் இன்று காலை 7 மணிக்கு காலை உணவை முடித்துவிட்டு, பின்னர் கல்லூரி பேருந்தில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குப் பயிற்சிக்காக சென்றனர். அப்போது, மருத்துவமனை வளாகத்தினுள் வந்து இறங்கிய போது 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், அவர்களை சக மாணவிகள் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



பின்னர், இது தொடர்பாக தகவலறிந்த மருத்துவமனை புறக்காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு மாணவிகளை ஒத்துழைக்க விடாமல் கல்லூரி முதல்வர் தடுத்ததால், மாணவிகளின் பெயரை கூட கூற மறுத்ததோடு சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிட்டு அதிரடியாக அங்கிருந்து மருத்துவர்களிடம் கூறாமல் கல்லூரி பேருந்தில் ஏற்றிச் செல்ல முயன்றனர்.



இதனைக் கண்ட காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரை எச்சரித்து, பேருந்தில் இருந்த மாணவிகளை சிகிச்சைக்காக திரும்ப அழைத்து சென்றனர். காலை உணவு ஒவ்வாத நிலையில் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் செய்தி வெளியே சென்றுவிடாமல் தடுப்பதிலேயே கல்லூரி நிர்வாகம் கண்ணும், கருத்துமாக செயல்பட்டது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...