கோவையை அடுத்த அவிநாசி சாலையில் ஓடும் கார் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : கோவையை அடுத்த அவிநாசி சாலையில் ஓடும் கார் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகேஸ், என்பவர் தனது காரை சர்வீஸ் செய்து விட்டு அவினாசி சாலையில் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே கார் வந்துகொண்டிருந்த போது, காரின் பின் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கார் ஓட்டுனரிடம் தீ பற்றி எரிவதை தெரிவித்தனர்.
உடனடியாக கார் நிறுதப்பட்டு,காரில் இருந்தவர்கள் வெளியேறியதால் அதிர்ஷ்ட வசமாக கார் ஓட்டுனர் மற்றும் ஸ்ரீகேஸ் இருவரும் உயிர்தப்பினர். மள மள வென்று பரவிய தீயால் காரின் பின் பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனையப்பு துறையினர் தீயை அணைத்தனர். பெட்ரோல் கசிவினால் இந்த விபத்து ஏற்பாட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பெட்ரோல் பங்க் அருகே கார் தீ விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.